வியாழன், 30 ஜூலை, 2015

கனவு நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி



கனவு நாயகன், இளைஞர்கள், மாணவர்களின் அறிவுச் சுடரை தூண்டியவர்..
இந்தியாவின் பெருமை, உங்கள் கனவெனும் ஏவுகனையில் எங்களின் பயணம் தொடரும்...

எங்களின் கண்ணீர் அஞ்சலி...








திங்கள், 4 மே, 2015

ரசாயன உரங்களால் உற்பத்தி குறைவு..

ரசாயன உரங்களைப் பயன்பத்துவதன் மூலம் வேளாண் உற்பத்தி குறைந்து வருவதாகவும், மண்ணின் வளமும், நலமும் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்

சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கில் சுற்றுச் சூழல் ஆய்வாளர் அகமது இஸ்மாயில் கூறினார்.


செய்தி: தினமணி, 25-11-2014.
 

செவ்வாய், 27 ஜனவரி, 2015

சென்னை புத்தகக் காட்சி 2015

38வது சென்னை புத்தக் காட்சி இந்த ஆண்டு ஜனவரி 9 முதல் 21 வரை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக் கணக்கான புத்தகங்கள், பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் என சென்னை புத்தக திருவிழா இனிதாக நிறைவு பெற்றது.


எங்களது ஸ்டால் எண் 612A. (F5 Green)  இந்த ஆண்டு சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வுக்காகவும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள்,
மற்றும் போஸ்டர்கள் விற்பனை செய்யப்பட்டன.





இயற்கை வேளாண்மை,  இயற்கை உணவுகள், சிறுதானியங்களின் மருத்துவ பயன்கள்,  சிறுதானிய சமையல் குறிப்புகள்,  மற்றும் சுற்றுச் சூழல், தண்ணீர் சிக்கனம், பிளாஸ்டிக் தீமைகள் போன்ற பல்வேறு தலைப்பு புத்தகங்களை அனைவரும் விரும்பி வாங்கிச் சென்றனர்.

புத்தகக் காட்சியில்  பார்வையாளர்கள் அனைவரிடத்திலும் இயற்கையை காக்க வேண்டும், சுற்றுச் சூழலை காக்க வேண்டும் என்கிற ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது என்பது நன்கு தெரிந்தது.


வியாழன், 1 ஜனவரி, 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

புதிய ஆண்டு, புதிய சிந்தனைகள், புதிய தீர்மானங்கள், புதிய முயற்சிகள், என்று அனைவரது நல்ல எண்ணங்களும்,  நல் முயற்சிகளும் இந்த ஆண்டில் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்...





செவ்வாய், 30 டிசம்பர், 2014

முதலாமாண்டு நினைவஞ்சலி

இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று..
மண்ணை நேசித்த மறக்கமுடியாத மா மனிதருக்கு எங்களின் நினைவஞ்சலி..


அய்யா வழியில் இயற்கை வேளாண் வழிகளை கடைபிடிப்போம்,
இயற்கையைக் காப்போம். இழந்த மண், நீர், நில வளங்களை மீட்டெடுப்போம்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

கிரீன் கஃபே - அறிமுகம்..




சென்னையில் 30-10-14 (வியாழன்) முதல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது கிரீன் கஃபே தி ஆர்கானிக் ரெஸ்டாரண்ட் முற்றிலும் ஒரு மாறுபட்ட விஷமில்லா விசேஷ விருந்து உங்களுக்காக... 


வேதி உரங்களற்ற - மாசற்ற - பூச்சிக் கொல்லிகள் தீண்டாத தானியம், அரிசி, காய்கறி, பழங்கள், எண்ணெய், பருப்பு, உப்பு முதல் சர்க்கரை வரையான இயற்கை விவசாய பொருட்களைக் கொண்டு தூய்மையாக தயாரிக்கப்படும் உணவுகள் உங்கள் உடல் நலத்தைக் காப்பதற்காக இங்கு விருந்தோம்பப்படுகின்றன. 


அரிசி, வரகு, சாமை, தினை, கேழ்வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற நார்ச்சத்து மிக்க உணவுகள் மறு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பண்டைய மரபார்ந்த உணவுகள் நவீன முறையில் கைதேர்ந்த சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன. 


லாபம் இரண்டாம் நோக்கமாகவும் சமூக அக்கறை முதன்மை நோக்கமாகவும் கொண்டு செயல்படும் கிரீன் கஃபேயில் உணவு-உடல் நலம்-சூழல் மூன்றுக்குமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.. 


இயற்கை வாழ்வியலுக்குத் திரும்பவும் - நல்ல உணவை விரும்பும் சமூக அக்கறையுள்ள நல் இதயங்களுக்கான இளைப்பாறும் இடமாக கிரீன் கஃபே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


கிரீன் கஃபே – தி ஆர்கானிக் ரெஸ்ட்ராண்ட் உணவை விற்கும் கடை மட்டுமல்ல, சூழல்-சமூகம்-நலம் சார்ந்த உணர்வை செம்மைப் படுத்தும் களம்.

Timings: 
Lunch : 11.30 a.m. to 3 p.m 
Dinner:  6.30 p.m   to 10 p.m

முகவரி: கிரீன் கஃபே, எண் 27/12 கிரசண்ட் பார்க் தெரு,
 (நடேசன் பூங்கா அருகில்)
தி. நகர், சென்னை 17. 
 போன் : 044 - 2434 7557 M: +91 99529 78888