புதன், 30 அக்டோபர், 2013
திங்கள், 28 அக்டோபர், 2013
இது நம்ம பூமி.
இயற்கையை நேசிக்கும் இனிய கீதம்...
Thanks: Raindropss Team.
” நம்பிக்கை ” வெற்றியோடு வரும்.
” வெற்றி ” நம்பிக்கை உள்ளவருக்கு மட்டுமே வரும்.
Thanks: Raindropss Team.
” நம்பிக்கை ” வெற்றியோடு வரும்.
” வெற்றி ” நம்பிக்கை உள்ளவருக்கு மட்டுமே வரும்.
வெள்ளி, 25 அக்டோபர், 2013
“மரத் தமிழன்” - நடிகர் விவேக்.
நடிகர் விவேக், பசுமை கலாம் அமைப்புடன்
இணைந்து தமிழகத்தில்பல்வேறு இடங்களில் இதுவரை சுமார் 19 இலட்சம்
மரக் கன்றுகளை நட்டுள்ளார். மேலும் திரு. அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையின் பேரில்
ஒரு கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.
உங்கள்
பசுமைப் பயணம் வெற்றி பெற " ஆர்கானிக் முத்ராவின் " நல்வாழ்த்துக்கள்..
நாமும் நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவோம். பசுமையை பெருக்குவோம்..
நடப்பட்ட மரங்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்…
விவேக் சார்.. J
விவேக் சார்.. J
பசுமை கலாம் இயக்கம் பற்றி தெரிந்துகொள்ள http://www.greenkalam.in
Thanks: Daily thanthi.
உண்ணும் உணவு உடலளவு பாயும்..
எண்ணும் எண்ணம் உலகளவு பாயும்.வியாழன், 24 அக்டோபர், 2013
இனி பனை மரத்தின் கீழே நின்று பால் குடிக்க முடியாது…!
ஒரு கோடி பனை மரங்கள் அழிப்பு.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி
பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தி.. மிகவும் கவலையடையச் செய்த செய்தி. வீட்டு மனைப் பிரிவுகளுக்காகவும், பனைச்
சட்டங்களுக்காகவும்
இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக செய்தி
தெரிவிக்கிறது. மரங்களை வெட்டும் வேட்டை இப்படியே தொடர்ந்தால்…இன்னும் நான்கு அல்லது ஐந்து
ஆண்டுகளில் பனை மரங்களே இல்லாமல் போய்விடும். உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு, பனை
வெல்லம், ஓலை விசிறிகள், பனங்கற்கண்டு போன்ற பனைப் பொருட்கள் இனி அரிதாகிவிடும். அந்தக்
காலத்தில் பனை மரத்தடியில் நின்று பாலைக் குடித்தாலும் கள்ளுதான், என்று ஒரு பழைய பழமொழி
உண்டு. இனி இந்த பழமொழிகள் எல்லாம் வழக்கொழிந்து
விடும்.இனி பனை மரம் இருந்தால் தானே கள்ளு குடிக்க..? பால்
குடிக்க..?Thanks: Dinamalar.
புதன், 23 அக்டோபர், 2013
நம்பிக்கை விதை விதைக்கிறார் - பாமயன்.
வேளாண் பொருளியல் நிபுணர் பாமயன். இவருடன் ஒரு மணி நேரம் பேச விட்டுக் கேட்டால், 'மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிரலாமா?' என்று நகரத்தில் வேலை பார்க்கும் எந்த விவசாயி வீட்டுப் பிள்ளையும் நினைப்பான். அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தின் மீது நம்பிக்கை விதை விதைக்கிறார் பாமயன்.
Thanks: Vikatan Web TV
நீ செல்லும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையென்றால்...அது நீ செல்லும் பாதையல்ல,
யாரோ ஒருவர் சென்ற பாதை.
Go Green... (கோ க்ரீன்...)
இன்றைய மாறிவரும் நாகரீக உலகில் நாம் இயற்கை வளங்களை அழித்து செயற்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பசுமை சூழல் மறைந்து எங்கும் கான்கிரீட் காடுகளாகி விட்டது.
நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால்,
மிகவும் அதிகமாக மாசுபட்டதென்னவோ இயற்கைதான்…
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களும் அதிவேகமாக மாசடைந்து
கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால்…. என்ன ஆகும்.? அது பற்றி நமக்னென்ன..? எவ்வளவோ பார்த்து விட்டோம்…இதை பார்க்க மாட்டோமா என்ன..? பார்க்கத்தான்
போகிறோம்…
இந்த மாசுபட்ட பூமியின் சுற்றுச் சூழலுக்கு
நாமே முக்கியப் பொறுப்பு. நம்மால் இயன்றவரை இயற்கையை பாதுகாப்போம்.. நீர், நில வள ஆதாரங்களைக்
காப்போம்… இயற்கை வளங்களை காப்பதன் மூலம் மட்டுமே நாம் முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கை
வாழமுடியும். நம்மால் இயன்ற சிறு சிறு முயற்சிகளை
இன்றே துவங்கிடுவோம்..
இந்த
வலைத்தளம், சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு முறைகள், மற்றும் பல சுவாரசியமான
தகவல்களை உங்களுக்கு வழங்கிடும்.
மரம் வளர்ப்போம்… பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை
முற்றிலும் தவிர்ப்போம்… தண்ணீரை சேமிப்போம். மண்வளம் காப்போம். இரசாயன உரங்கள் தவிர்ப்போம்.
நம்மை நாமே கேள்வி கேட்பதில் இருக்கிறது
நம்மை நாமே விமர்சிப்பதில் இருக்கிறது
நம்மை நாமே திருத்துவதில் இருக்கிறது
நம்மை நாமே பாராட்டுவதில் இருக்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)